சங்கத்திற்கு முன் தோன்றி இன்றும்
கண்ணியாய் காட்சியளிக்கின்றாய்.. உன்
இளமை அமுதை குடித்ததால்தான்
பாரதி, பாரதிதாசன், திருவள்ளுவர்
போன்றோர் இன்றும் நம்முள் இளமையாய் இருக்கின்றனர்.
உலகம் உள்ளவரை இளமை மாறாதது. இறவாத
புகழுடையவளே மாதொரு பாகன் சூடிய சுடராய்
எளியோர்க்கும் விளங்கிடும் சொற்களை உடலாய்
தித்திக்கும் தேன் போல இனித்திடும் கருத்தாய்
உலகத்து மக்களுள் உயர்ந்தவராக்க வந்த
தமிழென்னும் அமுதானவளே.. பசியால் வாடிடும்
பிள்ளைகளுக்கெல்லாம் தன்னையே வருத்தி
உணவளிக்கும் தாய் போல் எம் இனம் வாடியபோதெல்லாம்
உன்னையே தந்ததால் நாங்களும் நாளை
வருவோரும் உன்னையே வாழ்த்துவோம். மகளிர்க்கு
ஏழ்பருவம் எனப் பிரித்தளித்து குழந்தையாய்,
கண்ணியாய், தாயாய் தினமிருந்து இனிவரும்
சமுதாயம் சிறப்புடன் இருக்க ஒளடதம் கொண்டுவரும்
மூதாட்டியை போற்றுவோம். காலங்கள் மாறலாம்,
கோலங்கள் மாறலாம் பழையன பல கழித்து புதியன
புகும் வேளை மண்ணுக்குள் மாறாத வைரமாய்
பிறப்பெடுப்பாய். அவ்வேளை சமுதாயம் உன்னைப் போற்றிட
உன் துணையால் உன்னைக்கொண்டு புது நூல்கல்
பல கண்போம். அப்போதும் எங்களின் எண்ணமாய் நீ
உண்டு என்றென்றும் மாறிடா உன்னைப் போற்றியே
நாளும் இம்மண்ணில் நல்லோரை வாழவைத்து நாங்கள்
வாழ்வதோடு நீயும் வாழ்ந்திட என்றென்றும் வாழ்த்துவோம்...
-ச. ஷாரங்கன்.
Monday, 25 February 2008
Sunday, 24 February 2008
உன்னால் முடியும்
உதிர்ந்த பூக்கள் எல்லாம்
மரமாக முடியாது. விதையாகிய
நீ மரமாக முடியும்... சென்ற
காலம் எல்லாம் கல்லரையைக் காட்டினாலும்
நீ ஒரு காலச்சுவடு எழுந்து ஒளிவீசு.
காதல் என்பது கடமை அதை நேசி
அது உன்னை நேசிக்கும். கடவுள்
என்பது கோவிலில்லை உன் ஆத்மாவே கோவில்.
ஏன் பயப்படுகிறாய். பாரதத்தை
ஆளவந்தவெனே ஏன் கலங்குகிறாய். உன்
கரத்திலே உருவாகிறது இந்தியா...
-ச. ஷாரங்கன்.
மரமாக முடியாது. விதையாகிய
நீ மரமாக முடியும்... சென்ற
காலம் எல்லாம் கல்லரையைக் காட்டினாலும்
நீ ஒரு காலச்சுவடு எழுந்து ஒளிவீசு.
காதல் என்பது கடமை அதை நேசி
அது உன்னை நேசிக்கும். கடவுள்
என்பது கோவிலில்லை உன் ஆத்மாவே கோவில்.
ஏன் பயப்படுகிறாய். பாரதத்தை
ஆளவந்தவெனே ஏன் கலங்குகிறாய். உன்
கரத்திலே உருவாகிறது இந்தியா...
-ச. ஷாரங்கன்.
இளைஞனே
நண்பனே...
சாலையில் வேகம் கட்டாமல்
விவேகமாய் இருக்கவேண்டும்.. ஆனால்
வேலையில் வேகம் கட்டாமல்
காலத்தை கடத்தி விடுகிறாய்.. இளைஞனே
விருப்பம் போல் விடலை பருவத்தில்
சுற்றித்திறிய வேண்டும்.. ஆனால்
பொருப்பு உன்னைச் சுற்றிக்கொண்ட பின்னும் - நீ
மருப்பு தெறிவித்து சும்மா இருந்துவிடுகிறாய்.
மனிதனே.. கடமையை சரிவரச்
செய்துவிட்டு காத்திருக்க வேண்டும்.. ஆனால்
நல்லகாலம் வருமென்று காத்திருந்தே
கல்லறைக்குள் சரண் புகுந்துவிடுகிராய்.. மனிதா
நீ ஏணிப்படியில் ஏறுவதாய் நினைத்துக்
கொண்டு வழுக்குப்பாறையில் ஏறிக்கொண்டிருக்கிறாய்.
வாழ்க்கைப் பயணம் உணக்காக மட்டுமே
தரப்பட்டது - அதில் வழிதவறிவிடாதே...
-ச. ஷாரங்கன்.
சாலையில் வேகம் கட்டாமல்
விவேகமாய் இருக்கவேண்டும்.. ஆனால்
வேலையில் வேகம் கட்டாமல்
காலத்தை கடத்தி விடுகிறாய்.. இளைஞனே
விருப்பம் போல் விடலை பருவத்தில்
சுற்றித்திறிய வேண்டும்.. ஆனால்
பொருப்பு உன்னைச் சுற்றிக்கொண்ட பின்னும் - நீ
மருப்பு தெறிவித்து சும்மா இருந்துவிடுகிறாய்.
மனிதனே.. கடமையை சரிவரச்
செய்துவிட்டு காத்திருக்க வேண்டும்.. ஆனால்
நல்லகாலம் வருமென்று காத்திருந்தே
கல்லறைக்குள் சரண் புகுந்துவிடுகிராய்.. மனிதா
நீ ஏணிப்படியில் ஏறுவதாய் நினைத்துக்
கொண்டு வழுக்குப்பாறையில் ஏறிக்கொண்டிருக்கிறாய்.
வாழ்க்கைப் பயணம் உணக்காக மட்டுமே
தரப்பட்டது - அதில் வழிதவறிவிடாதே...
-ச. ஷாரங்கன்.
Friday, 15 February 2008
காதலன்
உட்காரப் புல்வெளி
எதிரே நீர்வெளி
நீர்போல் எண்ணையாய்
சூரியன்
பால் சொட்டுகளாய்
பறவைகள்
முட்டாமல் மோதாமல்
இணக்கமாய் காற்று
தூரத் தூர இரயிலோசைக்கும்
செவி கூசும் நிசப்தம்
எல்லாம் தவிர்த்து
கவனமாய் காத்திருக்கிறான்
கரையில் ஒருவன்
தொண்டையைக் கிழித்து
கண்ணைத் துளைத்த
தூண்டில் முள்ளுடன்
துடிக்கும் ஒரு மீனைக்
காணும் ஆவலுடன்...
-ச. ஷாரங்கன்.
எதிரே நீர்வெளி
நீர்போல் எண்ணையாய்
சூரியன்
பால் சொட்டுகளாய்
பறவைகள்
முட்டாமல் மோதாமல்
இணக்கமாய் காற்று
தூரத் தூர இரயிலோசைக்கும்
செவி கூசும் நிசப்தம்
எல்லாம் தவிர்த்து
கவனமாய் காத்திருக்கிறான்
கரையில் ஒருவன்
தொண்டையைக் கிழித்து
கண்ணைத் துளைத்த
தூண்டில் முள்ளுடன்
துடிக்கும் ஒரு மீனைக்
காணும் ஆவலுடன்...
-ச. ஷாரங்கன்.
என் வாழ்வின் அர்த்தங்கள்
மலரின் மணம்
மண்ணில் மடியும் வரைதான் - என்
வாழ்க்கையின் உள்ளர்த்தம் - நான்
வாழும் வரைதான்...
வாழ்ந்த கோடிகளில்
நிலைத்து நிர்க்கும் முகங்கள் சில...
நிந்திக்கப்பட்ட நிபந்தனைகள் போல்
நிலைத்து நிற்க்கும் நினைவுகள் போல்
வார்த்தைக்குள் உள்ளார்ந்த அர்த்தம் போல்
வாத்தியங்களுக்கு உயிராகும் இசை போல் - என்
வாழ்க்கையையும் அர்த்தமானதாக்குகிறேன்..
என்னுள் மறைந்திருக்கும் உணர்வுகளுக்கும்,
உணர்ச்சிகளுக்கும் உயிரோட்டம் காட்டுகிறேன்.
நான் காதலிக்கிறேன் உண்மைதான்
இயற்க்கையை காதலிக்கிறேன்.
இறைவன் படைப்புகளை காதலிக்கிறேன்.
உண்மையை காதலிக்கிறேன் - என்
உணர்ச்சிகளை காதலிக்கிறேன்.
அனைத்திற்க்கும் மேலாக நான்
என்னையே காதலிக்கிறேன் - ஆம்
வேதத்தில் சொல்லப்படுகின்ற வேதாந்தங்கள் போல
என் வேதனைகளை வார்த்தையாக்கினால்
கவிதைக்கு பதிலாக கண்ணீர்தான் வரும் - ஆனால்
வேதனைகளையும், வாழ்வின் சோதனைகளையும்
காதலிக்கப் பழகியதால் சோதனையிலும்
சுகம் காண்கிறேன்.
காதலிப்பவனுக்குத்தான் கவிதை வரும்
என்றில்லை. வாழ்வில் பல
சோதனைகளையும், துக்கங்ளையும்
சேர்ந்திருந்து சுவைக்கும் போது
கவிதை கணைகள் கார்கால
மழை போல இதய
வானிலிருந்து விழும்.
நடந்து வந்த பாதைகள்
மலருகின்ற நினைவுகள்
நெருங்கி வந்த பந்தங்கள்
வந்து போன வசந்தங்கள்
வாடி நின்ற வார்த்தைகள் - என்
வாழ்க்கையின் உள்ளர்த்தத்தை நினைவு கூறும்
இதயத்தில் இடி விழுந்து
கண்ணீர் வானில்
கதரிய நாட்கள் பல.
கானல் நீரைச் சுவைக்க விரும்பி
சோதனைச் சுழலில் சிக்கித்தவிப்பவன் போல்
நிரைவேரா ஆசைகளை
நிரைவேற்ற எண்ணி - பல
போராட்டங்களைப் போராடியிருக்கிறேன்.
ஆனால்...
நான் சலைத்தவன் அல்ல
போர் கொடி தூக்கிய போராட்டங்களுக்கும்
முடிவுகள் உண்டு - ஆனால்
என் வாழ்க்கை போராட்டத்திற்கோ
இறப்பில்தான் முடிவு - ஆம்
வாழ்க்கையே ஓர் போராட்டம் தானே...
ஒவ்வொரு யுகங்களும்
யுத்தங்களாக வருகின்றன.
என் வாழ்க்கையில் வசந்தங்களாய்
வந்த வஞ்சிகள் பலர் - ஆம்
அவர்கள் வசந்தங்களைப் போல்
அடிக்கடி மாறிவிடுகின்றனர்...
ஓ!
மாற்றம் ஒன்றே நிலையானது
என்பது இதனால்தானோ!...
என் வாழ்க்கை கட்டத்தில்
இனிய நினைவுகளும், இதயம்
விரும்பிய மலர்களும் ஏராளம் - ஆம்
மலரின் மனம்
மாலைக்குள் மறைந்து விடுவது போல்
என் வாழ்வின் வசந்தங்களும்.......
- ச. ஷாரங்கன்.
மண்ணில் மடியும் வரைதான் - என்
வாழ்க்கையின் உள்ளர்த்தம் - நான்
வாழும் வரைதான்...
வாழ்ந்த கோடிகளில்
நிலைத்து நிர்க்கும் முகங்கள் சில...
நிந்திக்கப்பட்ட நிபந்தனைகள் போல்
நிலைத்து நிற்க்கும் நினைவுகள் போல்
வார்த்தைக்குள் உள்ளார்ந்த அர்த்தம் போல்
வாத்தியங்களுக்கு உயிராகும் இசை போல் - என்
வாழ்க்கையையும் அர்த்தமானதாக்குகிறேன்..
என்னுள் மறைந்திருக்கும் உணர்வுகளுக்கும்,
உணர்ச்சிகளுக்கும் உயிரோட்டம் காட்டுகிறேன்.
நான் காதலிக்கிறேன் உண்மைதான்
இயற்க்கையை காதலிக்கிறேன்.
இறைவன் படைப்புகளை காதலிக்கிறேன்.
உண்மையை காதலிக்கிறேன் - என்
உணர்ச்சிகளை காதலிக்கிறேன்.
அனைத்திற்க்கும் மேலாக நான்
என்னையே காதலிக்கிறேன் - ஆம்
வேதத்தில் சொல்லப்படுகின்ற வேதாந்தங்கள் போல
என் வேதனைகளை வார்த்தையாக்கினால்
கவிதைக்கு பதிலாக கண்ணீர்தான் வரும் - ஆனால்
வேதனைகளையும், வாழ்வின் சோதனைகளையும்
காதலிக்கப் பழகியதால் சோதனையிலும்
சுகம் காண்கிறேன்.
காதலிப்பவனுக்குத்தான் கவிதை வரும்
என்றில்லை. வாழ்வில் பல
சோதனைகளையும், துக்கங்ளையும்
சேர்ந்திருந்து சுவைக்கும் போது
கவிதை கணைகள் கார்கால
மழை போல இதய
வானிலிருந்து விழும்.
நடந்து வந்த பாதைகள்
மலருகின்ற நினைவுகள்
நெருங்கி வந்த பந்தங்கள்
வந்து போன வசந்தங்கள்
வாடி நின்ற வார்த்தைகள் - என்
வாழ்க்கையின் உள்ளர்த்தத்தை நினைவு கூறும்
இதயத்தில் இடி விழுந்து
கண்ணீர் வானில்
கதரிய நாட்கள் பல.
கானல் நீரைச் சுவைக்க விரும்பி
சோதனைச் சுழலில் சிக்கித்தவிப்பவன் போல்
நிரைவேரா ஆசைகளை
நிரைவேற்ற எண்ணி - பல
போராட்டங்களைப் போராடியிருக்கிறேன்.
ஆனால்...
நான் சலைத்தவன் அல்ல
போர் கொடி தூக்கிய போராட்டங்களுக்கும்
முடிவுகள் உண்டு - ஆனால்
என் வாழ்க்கை போராட்டத்திற்கோ
இறப்பில்தான் முடிவு - ஆம்
வாழ்க்கையே ஓர் போராட்டம் தானே...
ஒவ்வொரு யுகங்களும்
யுத்தங்களாக வருகின்றன.
என் வாழ்க்கையில் வசந்தங்களாய்
வந்த வஞ்சிகள் பலர் - ஆம்
அவர்கள் வசந்தங்களைப் போல்
அடிக்கடி மாறிவிடுகின்றனர்...
ஓ!
மாற்றம் ஒன்றே நிலையானது
என்பது இதனால்தானோ!...
என் வாழ்க்கை கட்டத்தில்
இனிய நினைவுகளும், இதயம்
விரும்பிய மலர்களும் ஏராளம் - ஆம்
மலரின் மனம்
மாலைக்குள் மறைந்து விடுவது போல்
என் வாழ்வின் வசந்தங்களும்.......
- ச. ஷாரங்கன்.
Subscribe to:
Comments (Atom)